Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: தீர்ப்பு எப்போது?

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (14:16 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு, சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றிய நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைனில் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தன. 
 
இந்த விசாரணையில் தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது என தமிழக அரசு வாதாடியது. மேலும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் வாதாடப்பட்டது 
 
ஆனால் தமிழக அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர அதிகாரம் இல்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாதாடின. இந்த நிலையில் இரு தரப்பு  வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments