Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர்: அண்ணா நினைவிடத்தில் நடந்த சந்திப்பு குறித்து சசிகலா

Mahendran
சனி, 3 பிப்ரவரி 2024 (12:44 IST)
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த வந்த சசிகலா தற்செயலாக அங்கு மரியாதை செலுத்து வந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் பேட்டி அளித்த போது ஓ பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்ட காட்சியையும் அங்கு பத்திரிகையாளர்களால் பார்க்க முடிந்தது.

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கூறிவரும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்களுடன் ஓ பன்னீர் செல்வம் இணைந்து செயல்படுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பை அவரது ஆதரவாளர்கள் பாசிட்டிவாக பார்த்து வருகின்றனர். இந்த சந்திப்புக்கு பின் அதிமுக ஒன்றிணையுமா? சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து ஒரு அணியை உருவாக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments