Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் மீண்டும் சசிக்கலா! தூது செல்லும் ஓபிஎஸ் சகோதரர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (15:48 IST)
அதிமுகவில் மீண்டும் சசிக்கலாவை இணைக்க வேண்டும் என அதிமுகவினரே கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓபிஎஸ் சகோதாரர் ராஜா நாளை சசிக்கலாவை நேரில் சந்திக்க உள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா, சசிக்கலாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு சசிக்கலா அதிமுகவில் மீண்டும் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments