Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (11:51 IST)
மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ள எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ”நிவர் புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் வழங்குவது ஏற்புடையது அல்ல. குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments