Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன வாரம் ஊழல் அரசு..இந்த வாரம் ஒரு தாய் மக்கள் - ஓ.பி.எஸ் அந்தர் பல்டி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:19 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி தற்போது இணைந்துள்ளது.


 

 
6 மாத கால போராட்டங்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓ.பி.எஸ் அணி, இரு அணிகளும் இணைவதாய் அறிவித்துள்ளது. ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து கொண்டனர். அதன் பின் பேசிய ஓ.பி.எஸ் “ நாங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த எங்களை, ஜெயலலிதாவின் ஆன்மா எங்களை இணைத்துள்ளது” எனப் பேசினார்.
 
இதே ஓ.பி.எஸ் சென்ற வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது “ இந்த அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது” எனக் குற்றம் சாட்டினார். தற்போது ‘நாங்கள் ஒரு தாய் மக்கள்’ என்று பேசியிருக்கிறார்.
 
சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிப்பேசும் ஆற்றல் படைத்தவர்கள் அரசியல்வாதிகள் எனவும், அது போன வாரம்.. இது இந்த வாரம் எனவும் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து  வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments