Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் மீதான பயம் - உச்ச நீதிமன்றம் கேவியட் மனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:14 IST)
இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சொந்தம் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
 
அந்நிலையில், வருகிற டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகர்  தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது. எனவே, தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை ஏற்பட்டால், எடப்பாடி அணியால் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாமல் போகும்.
 
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் தற்போது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான ஏதேனும் உத்தரவை பிறப்பிக்கும் முன்பு தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments