Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (11:38 IST)
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 22 முதல் 24 வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த நான்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதியில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இது தமிழக கடலோரத்தை ஒட்டி நீடிப்பதால் தமிழகத்தில் தற்போது பல பரவலாக மழை பெய்து வருவதாகவும்  இன்று மதியம் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments