Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழக தேர்வுகளை தள்ளி வைக்க ஆணை! முதல்வருக்கு நன்றி கூறிய சு. வெங்கடேசன் எம்பி.,

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (18:19 IST)
மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளதற்கு சு. வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் திசம்பர் 10 - 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு அன்புமணி ராமதாஸ் எம்பி, சு.வெங்கடேசன்  எம்பி  பலரும் எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழகத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த  நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதற்கு,  சு. வெங்கடேசன் எம்பி டுவிட்டர் பக்கத்தில், முதல்வர் முக.  ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், ‘’தமிழக முதல்வருக்கு நன்றி

ஸ்டாப்ஃ செலக்சன் கமிஷன் தேர்வுகளும், தமிழக பல்கலைக் கழக தேர்வுகளும் மோதுவதால் தமிழக இளைஞர்களின் தேர்வு வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று @CMOTamilnadu கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

சில மணி நேரத்தில் தீர்வு. பல்கலைக் கழக தேர்வுகளை தள்ளி வைக்க ஆணை ஒன்றிய அரசுத் துறை அசையாத நிலையில் தமிழக அரசின் அசத்தல்  தீர்வு.

தமிழக மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments