Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதே நிலை தொடர்ந்தால் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இருப்பார்: ப சிதம்பரம் எச்சரிக்கை..!

chidambaram
Siva
வெள்ளி, 29 மார்ச் 2024 (14:44 IST)
தேர்தல் நேரத்தில் ஒரு மாநில முதல்வரை கைது செய்து சிறையில் அடைகின்றனர், இது நிலை தொடர்ந்தால் இந்தியாவில் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இருப்பார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேர்தல் சமயத்தில் சிறையில் அடைகின்றனர், இது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
 
இதே நிலை தொடர்ந்தால் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இந்தியாவில் இருப்பார். இது ஜனநாயகத்திற்கு வந்த பெரிய ஆபத்து, இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. ஜனநாயகம் பிழைக்குமா? செத்துப் போகுமா? அதற்கு வாழ்வா? சாவா? அரசியல் சாசனம் இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி தான் மக்கள் முன்னிலையில் எழுந்துள்ளது என்று கூறினார் 
 
ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவருக்கு ஆதரவாக ப சிதம்பரம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments