Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார் பழனிசாமி!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (21:18 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடக்கவுள்ளது.  இதற்காக  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின்   வாக்கு சேகரித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது; '’பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உரிமைத்தொகையை ஸ்டாலிந்தான் அண்ணன் தான் கொடுத்தார் என்றுதான் தமிழ்நாட்டு மகளிர் சொல்வார்கள் என்று கூறினார்.
 
மேலும், பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் ஊட்டப்பட்டு எங்கெங்கும் மதக் கலவரம் என்ற நிலை உருவாகும்.  படிப்பதால் உரிமை கேட்கின்றோம் என்பதால் கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களை சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை பொய்களால் மாற்றி எழுதுவார்கள்...ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு, ஒரே அரசியல் கட்சி ஒரே கட்சி தலைவர் என ஒரே ஒரே என்று நாட்டை நாசம் செய்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ICINet: அனைத்து தோ்தல் சேவைகளுக்கும் ஒரே செயலி! தோ்தல் ஆணையம் அறிமுகம்

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments