Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென பழுதான பாம்பன் பாலம்: ரயில்கள் ரத்தானதால் பயணிகள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:00 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் இன்று மாலை திடீரென பழுதானது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் அஜ்மீர் விரைவு ரயில் இரவு 10.15க்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை காலை 7.15க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அஜ்மீர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரவு முழுவதும் பயணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பழுதான பாம்பன் ரயில் பாலத்தை பழுதுநீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் பழுது சரிசெய்யபப்டும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments