Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (12:08 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் முன்னதாகவே செலுத்தப்பட்டு வந்தாலும் பலர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமலே இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் தடுப்பூசி செலுத்துவதையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்களாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட இந்த வாரம் 50% அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments