Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசாருடன் மோதும் பொதுமக்கள் ; தொடரும் கலவரம் : தூத்துக்குடியில் பதட்டம்

Webdunia
புதன், 23 மே 2018 (17:29 IST)
தூத்துக்குடியில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான மோதல் முடிவிற்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 
தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.  
 
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று தூத்துக்குடி அண்னாநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம், உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு இன்று காலை ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுவீசியும் போலீசார் அவர்கள கலைத்தனர். இதனால், கோபமடைந்த சிலர் போலீசாரின் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்தனர்.
 
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற வாலிபர் மரணமைடந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் போலீசாரின் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் போலீசாரை நோக்கி கற்கள், பெட்ரோல் குண்டு, பாட்டில்கள் ஆகியவற்றி வீசி வருகின்றனர். குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணிக்காக சென்ற போது அப்பகுதி மக்கள் போலீசார் மீது கற்களை வீசு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இப்படி தொடர் மோதலில் மக்கள் ஈடுபடுவதும், போலீசார் திருப்பி தாக்குவதும், துப்பாக்கிச்சூடு நடத்துதும், உயிர் பலி தொடர்வதும், தூத்துக்குடியில் போராட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments