Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டான பெரியார் சிலையின் தலை: அறந்தாங்கி அருகே பரபரப்பு!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (08:34 IST)
அறந்தாங்கி அருகே இருந்த பெரியார் சிலை ஒன்றின் தலை துண்டானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் அவ்வப்போது தலைவர்களின் சிலைகள் சேதமாக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலையின் தலை துண்டானதோடு, அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மூக்கு கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
 
கடந்த 1988ஆம் ஆண்டு திக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்திருந்த இந்த சிலை தேர்தலை முன்னிட்டு துணியால் சுற்றி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு இந்த சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்து, சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
காவதுறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் சிலையை சேதப்படுத்தியவர்களை பிடித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கி.வீரமணி கூறியதால் இந்த சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments