Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயவுசெய்து யாரும் நர்ஸிங் படிக்காதீங்க! கண்ணீருடன் போராடும் நர்ஸ்கள்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (10:56 IST)
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் இன்றுமுதல் உண்ணாவிரத போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நர்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்களை தேர்வு மூலம் பணியமர்த்தியபோது இரண்டு வருடங்களில் அரசு ஊழியர்களாக ஆக்கப்படுவீர்கள் என்று கூறியதால்தான் இந்த பணியில் சேர்ந்தோம். ஆனால் தற்போது ரூ.7200 சம்பளம் மட்டுமே கடைசி வரை வழங்க முடியும் என்றும், நர்ஸ்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.
 
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்போவதாக அரசு மிரட்டியுள்ளதால் ஒருசிலர் மட்டுமே போராட்டத்தில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் நாங்கள் கடைசி வரை போராடுவோம். நர்ஸ் படித்த எங்களுடைய நிலைமையை பார்த்து, தயவுசெய்து இனிமேல் யாரும் நர்ஸ் வேலைக்கு படிக்க வேண்டாம். நர்ஸ்கள் என்றால் சேவை மனப்பான்மை உடையவர்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் நாங்கள் சாப்பிட்டோமா என்று கேட்ககூட நாதியில்லை' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments