Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வுகள் ரத்து: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (14:21 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஏற்கனவே பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுவையிலும் பிளஸ் டூ தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பிரதமர் மோடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற முடிவை எடுத்தார். அதன்பிறகு மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் குஜராத் உத்தரகாண்ட் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளஸ் டூ தேர்வு அறிவிப்பு வெளியானது 
 
இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற முடிவை அறிவித்தார். இதனை அடுத்து மேலும் சில மாநிலங்கள் பிளஸ்டூ தேர்வு ரத்து என்ற முடிவை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 
 
அந்தவகையில் சற்றுமுன் புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புதுவையிலும் பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை அடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது போலவே புதுவையிலும் கணக்கிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments