Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும்மா சும்மா முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் பாட்ஷா! – மீண்டும் கைது!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (10:24 IST)
தமிழக முதல்வர் இல்லத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் ஆசாமி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் கண்காணிப்பு அறைக்கு ஒரு மிரட்டல் போன் கால் வந்தது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருக்கும் முதல்வர் இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம ஆசாமி ஒருவர் கூறியுள்ளார்.

உடனடியாக தலைமை செயலகம் மற்றும் முதல்வர் இல்லத்தில் போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிக்குண்டு நிபுணர்களோடு சோதனை நடத்தினர். ஆனால் அதில் எந்த வெடிப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அழைப்பு வந்த அந்த எண்ணை ட்ராக் செய்ததில் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பிறகு சில நாட்களில் அவர் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் முதல்வர் இல்லத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக அந்த எண்ணை ட்ராக் செய்த போலீஸார் மீண்டும் சிக்கந்தர் பாட்ஷாதான் போன் செய்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர். மீண்டும் சிக்கந்தர் பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments