Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய்-மகள் கைது

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (17:16 IST)
சென்னையை சேர்ந்த தாய், மகள் ஆகியோர் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணும், அவரது மகள் மோனிஷாவும் இணைந்து அதே பகுதியில், வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் தனது மகனுக்கு வேலை வேண்டி முத்துராஜ் என்பவர் பதிவு செய்தார். அவரிடம் மகனுக்கு நல்ல வேலை  வாங்கித் தருவதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் அமுதாவும் மோனிஷாவும் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால் முத்துராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் பெங்களூரில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அமுதாவையும், மோனிஷாவையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்துராஜை போல் பலரிடம் வேலை வாங்கி தருவதாக  கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments