Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது - போலீசார் கை விரிப்பு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (15:59 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டதாக அவர் மீது மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 


 

 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கமல் மீது வழக்கு போட முகாந்திரம் இருந்தால் தாராளமாக வழக்கு போடலாம் என்று அறிவுறுத்தியது. அந்த நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் கமல் மீது வழக்கு போடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். அதன்பின், கமல் மீது வழக்கு போடுவது குறித்து காவல்துறையினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியானது.
 
இந்நிலையில், இந்த புகாரில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மனுதாரருக்கு பதில் அனுப்பப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments