Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் பெண் போலீஸிடம் தகராறு! – திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (09:08 IST)
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் பெண் காவலரிடம் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வளையம்பட்டி ஐந்தாம் ரோட்டில் காவலர்கள் வாகன பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி காரில் வந்துள்ளார். அவரது காரையும் காவலர்கள் சோதனையிட முயன்றபோது அதை அவர் தடுத்ததுடன் பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தைகளில் திட்டி தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மது அருந்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments