Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை குட்கா தொழிற்சாலையில் போலீஸார் அதிரடி சோதனை

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (12:54 IST)
கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து வந்த தொழிற்சாலையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் நல்லான் தோட்டம் என்ற பகுதியில் டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சொகுசு பங்களாவும், 20 ஆயிரம் சதுர அடியில் குடோனும் அமைந்துள்ளது.  
 
அந்த குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட  குட்கா, பான்மசாலா, சாந்தி பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யப்படுவதாக கோவை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து தகவலின் பேரில் 100-க்கும் மேற்பட்ட  தனிப்படை போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் பங்களா தோட்டத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு சோதனை நடத்திய போது கோடிக்கணக்கான மதிப்பில் போதை பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் அங்கிருந்த அனைத்தையும் கைப்பற்றி, தலைமறைவாக உள்ள உரிமையாளர் ஜெயினை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments