Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசிந்தது அமோனியா வாயு தான்: உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:48 IST)
சென்னை எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து கசிந்தது அமோனியா வாயு தான் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. 
 
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியா எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் சற்றுமுன் உறுதி செய்துள்ளது. 
 
ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லிகிராமாக இருக்க வேண்டிய அமோனியா தற்போது 49 மில்லிகிராம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments