Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம்..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:36 IST)
பொங்கல் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்பும் பொதுமக்கள் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கு இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 10ஆம்  தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்க இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டு  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் இன்று 10 மணிக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments