Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசா குறித்த கேள்வி.. கடுப்பான அமைச்சர் பொன்முடி

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:56 IST)
ஆ ராசா குறித்து எந்த கேள்வி கேட்டாலும் திமுக பிரமுகர்கள் பதில் சொல்ல மறுத்து வருவது கடந்த இரண்டு நாட்களாக வழக்கமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ ராசா பேசியது இந்து மத மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று இது குறித்த கேள்வி ஒன்றை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் செய்தியாளர்கள் பேசியபோது அந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்தார்.  உடன் இருந்த திமுக எம்பி தயாநிதி மாறனும் இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் பொன்முடி சந்தித்த போது ஆ ராசா குறித்த கேள்வியை கேட்ட போது வேறு கேள்வியே இல்லையா என அவர் கடுப்பானார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆ ராசாவுக்கு திமுக தரப்பில் எந்த விதமான ஆதரவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments