Publish Date: Sat, 11 Apr 2026 (14:15 IST)
Updated Date: Sat, 11 Apr 2026 (14:19 IST)
ஏற்கனவே நடிகர் ராமராஜன் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த நிலையில் தற்போது நடிகர் பொன்னம்பலமும் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார்.
நேற்று அவர் கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக ஒரு தீய சக்தி.. தேமுதிக ஒரு தீஞ்ச சக்தி.. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.. மக்கள் இவர்களை புறக்கணிப்பார்கள்.. விஜய் திரைத்துறையில் மட்டுமில்லாமல் பலருக்கும் உதவிகளை செய்திருக்கிறார்.. அவர் ஒரு பண்பாளர்.. அவர்தான் நாட்டை ஆள வேண்டும்.. கோடிக்கணக்கான சொத்து இருந்தும் அதை உதறிவிட்டு அவர் மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறார்..
திமுக யாரையும் வளர விட மாட்டார்கள்.. அவர்களை மீறி வளர்ந்தால் பல்வேறு இடையூறுகளை கொடுப்பார்கள்.. அதுதான் விஜய்க்கு நடக்கிறது.. ஒரு திரைப்படம் வெளியாக வேண்டும் என்றால் கூட அது திமுகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் அனுமதி கொடுத்தால்தான் முடியும்..
திமுக ஒரு தீய சக்தி என்பதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.. விஜயகாந்தை இந்த தீய சக்திதான் கொண்டு போனது. இன்னைக்கு பிரேமலதாவும் அவங்க கூட சேர்ந்திருக்காங்க.. அது வெற்றியை கொடுக்காது.. அவங்களெல்லாம் காசு சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்காங்க.. ஆனால் சினிமாவில் அவ்வளவு சம்பளத்தை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது உங்களுக்காகத்தான்.. எனவே தளபதி ஜெயித்து முதலமைச்சர் ஆகணும் என்று அவர் பேசினார்..