Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தேதி? – தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (13:51 IST)
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி தேர்வுகளுக்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடந்த நிலையில் இந்த முறை நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மே மாதம் முதலாக பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக இந்த வகுப்புகளுக்கு அறிவியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெற உள்ளது. செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments