Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற கர்ப்பிணி தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (09:22 IST)
கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் பேராவூரணி அருகே கணக்கெடுக்க வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பேராவூரணி அருகே காலகம் என்ற கிராமத்திற்கு புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பிருந்தா, செந்தில்குமார், கிராம உதவியாளர் விஜயா ஆகியோர் சென்றனர். இவர்களில் பிருந்தா கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருசில நாட்களாக தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மூன்று அதிகாரிகளையும் அக்கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிருந்தா உள்பட மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை தாக்கினால் எப்படி நிவாரணம் கிடைக்கும் என்பது கூட புரியாமல் கிராம மக்கள் தாக்கி வருவதாகவும், ஒருசிலர் தூண்டிவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments