Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயல்படாத கட்சிக்கு செயல் தலைவராம்: ஸ்டாலினை விளாசும் பிரேமலதா!

செயல்படாத கட்சிக்கு செயல் தலைவராம்: ஸ்டாலினை விளாசும் பிரேமலதா!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:01 IST)
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.


 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிஎல்பி திருமண மண்டபத்தில் நேற்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. நீட் தேர்வுக்காக போராடி தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு ஒரு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவை தொடங்கினார்கள்.
 
இந்த பொதுக்குழுவில் பேசிய பிரேமலதா, நமது கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஜெயலலிதாவின் மூஞ்சை உடைப்பதுபோல் நேருக்கு நேர் கேள்விகளைக் கேட்டார். ஆனால் தற்போது உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார் என்றார்.
 
மேலும் செயல்படாத கட்சிக்குச் செயல் தலைவராம். ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி கேட்பதில்லை; வாய் திறப்பதில்லை என கூறினார் பிரேமலதா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்