Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை கைப்பற்றும் தினகரன்; ஏப்ரலுக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி!

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (15:50 IST)
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார் எனவும், தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் எனவும் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.
 
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்ந்து பிரபலமானவர். இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 5-ஆம் ஆண்டு விழா கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு பேசிய டிராஃபிக் ராமசாமி, தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
 
மேலும், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன் தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர். அவர் விரைவில் அதிமுகவைக் கைப்பற்றுவார் என்றார் டிராஃபிக் ராமசாமி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments