Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மணிக்கு பிரதமர் மோடி உரை....இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:48 IST)
பிரதமர் இன்று மாலை 5 மணிக்கு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் இதுகுறித்த இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு மருந்துகளையும் மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  இதனால், மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாள் கழித்து பிரதமர் மக்களுக்கு உரையாற்ற உள்ளதால், கொரொனா பாதிப்புகள் குறைந்துவருவது குறித்தும் மக்கள் அவசியம் தடுப்பு மருத்துகள் போடவேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துவார் எனவும். கருப்பு, வெள்ளை, மஞ்சல் பூஞ்சை தொற்றுகளுக்கு மருத்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றைக் குறித்துப் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments