Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் அண்ணாமலை கைது!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:21 IST)
சென்னை,வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம்  நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பேச்சாளர் சாதிக் என்பவர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி  நடிகை குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

இந்த நிலையில்,  இந்த மன்னிப்பை ஏற்காத குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி காவல்நிலையத்தில் புகார் அளிப்பட்டு அவர் மீது  வழக்குத் தொடர்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த பெண்களை திமுகவினர் அவதூறு பேசுவதாகக் கூறி இன்று பாஜக மகளிர் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி இப்போராட்டம் நடத்தியகாகக் கூறி போலிஈஸர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments