Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டையில் திடீரென சாய்ந்த தேர்: 5க்கும் மேற்பட்டோர் காயம்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:45 IST)
புதுக்கோட்டையில் திடீரென சாய்ந்த தேர்: 5க்கும் மேற்பட்டோர் காயம்!
புதுக்கோட்டை அருகே திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
புதுக்கோட்டையில் கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் தேர்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து வந்தனர். அப்போது திடீரென தேர் குடை சாய்ந்தது.
 
இதில் இடிபாடுகளில் சிக்கி ஐந்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து இருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தேரின் அடித்தளம் சரியாக அமைக்கப்படவில்லை என்றும் அதனால்தான் இந்த விபத்து நேரிட்டதாக விழா அமைப்பாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments