Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இல்லாத மாநிலமானது புதுச்சேரி! – மக்கள் நிம்மதி!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (11:23 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மூன்று அலை பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் 3 லட்சத்தை தொட்ட தினசரி பாதிப்புகள் தற்போது 12 ஆயிரமாக குறைந்துள்ளன.

இந்நிலையில் பல மாநிலங்களிலும் கொரோனா வெகுவாக குறைந்துள்ளது. யூனியன் மாநிலமான புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்படாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. இது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments