Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தமிழகம் வரும் ராகுல்காந்தி! – தென்தமிழக பகுதிகளில் பிரச்சாரம்!

மீண்டும் தமிழகம் வரும் ராகுல்காந்தி! – தென்தமிழக பகுதிகளில் பிரச்சாரம்!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னதாக தமிழகம் வந்து சென்ற ராகுல்காந்தி இந்த மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி அமைத்து வரும் தேசிய கட்சியின் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டை காண வந்த ராகுல் காந்தி பின்னர் பிரச்சாரத்திற்காக மீண்டும் தமிழகம் வந்தார். கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர் சமையல் யூட்யூப் சேனலை சேர்ந்தவர்களை சந்தித்ததும் வைரலானது.

இந்நிலையில் ராகுல்காந்தி அடுத்த கட்ட பிரச்சாரத்துக்காக பிப்ரவரி 27,28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த முறை தென் தமிழக பகுதிகளான தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ஸில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவு எது? ரூ.3 கோடி பரிசு - நாசா அறிவிப்பு