Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டை பார்க்க வரும் ராகுல் காந்தி! – ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:18 IST)
பொங்கல் நாட்களில் பிரபலமாக தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

பொங்கல் திருநாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா பாதிப்புகள் இருப்பதால் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் மிகவும் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் அன்று நடைபெற உள்ளது. வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வெளிநாடுகளிலிருந்து கூட பலர் வருகை புரிவார்கள். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பியுமான ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments