தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் இரவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.