Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:30 IST)
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக சமீபத்தில்  சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.  
 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்த 20 மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments