Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Siva
புதன், 10 ஜனவரி 2024 (07:27 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடமேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் பரவலாக சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் மேற்கண்ட ஐந்து மாவட்டத்தில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments