Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:18 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக நேற்று இரவு திடீரென சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னையில் உள்ள பல சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தது என்பதையும் பார்த்து. 
 
இந்த நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments