Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை.. பொதுமக்கள் சிரமம்..!

சென்னை
Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (09:06 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பொது மக்கள் சிரமத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே சில மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments