Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளுகுளுவென மாறிய சென்னை.. மீண்டும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

Mahendran
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (19:58 IST)
சென்னையில் தற்போது முக்கிய பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து சென்னை நகரமே குளு குளு என மாறி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் சற்றுமுன் சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை அடையாறு, கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சித்தலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னை நகரின் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், பாண்டி பஜார், ஆழ்வார்பேட்டை , அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதை அடுத்து சென்னை நகரமே குளிர்ச்சியாக மாறி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments