Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன மழை, திரும்ப வருமா? வெதர் ரிபோர்ட்!!

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (16:42 IST)
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ஆனால், இன்று பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையே பெய்தது. 
 
தற்போது தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. இது ஒன்று மேலும் தீவிரமடைந்து வடக்கு, வடமேற்கு திடையில் ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
ஆம், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments