Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (14:49 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ஜூலை 27 முதல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments