Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

Mahendran
ஞாயிறு, 18 மே 2025 (10:50 IST)
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது எனவும், இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
 
வெப்பநிலை குறித்துப் பேசும்போது, அதிகபட்சமாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை மற்றும் குறைந்தபட்சமாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
மேலும், இன்று தென்மேற்கு வங்கக்கடலில் சில இடங்களில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments