Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேப்டாப் சார்ஜ் செய்த பெண் பலி.. இராஜபாளையம் அருகே சோக சம்பவம்..!

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (21:39 IST)
விருதுநகர் அருகே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் லேப்டாப்புக்கு சார்ஜ் ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடந்துள்ளது. 
 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் என்ற பகுதியில் செந்திமயில் என்ற இளம் பெண் லேப்டாப் சார்ஜ் செய்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
லேப்டாப் சார்ஜ் செய்ய முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியதாகவும் இதனால் தூக்கி வீசப்பட்ட செந்திமயில் மருத்துவமனை சென்றபோது அங்கு மருத்துவர் அவரை பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரது வீட்டினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments