Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒரு ஸ்டார்... ஆஜாராகமல் டிமிக்கி கொடுக்கும் ரஜினி!!

ரஜினிகாந்த்
Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (11:58 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 
 
தூத்துக்குடி போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தில் காயமடைந்த மக்களை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது ரஜினி அவர்களை சென்று சந்தித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளாகியது. 
 
இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பபட்டது. ஆனால், தற்போது ரஜினி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரியுள்ளார். 
 
நான் ஒரு நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி விலக்கு கேட்டுள்ளார் ரஜினி.
 
மேலும், கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு தாமதிக்காமல் பதில் தர தயார் எனவும் ரஜினி தரப்பு மனுதாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments