Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நடவடிக்கை - அரசை பாராட்டிய ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (15:31 IST)
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.   
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 166 பேரில் 25 பேர் வெளிநாட்டவர்கள் என்றும், மீதமுள்ள 141 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரொனா இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசோடு மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments