Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு! ரஜினி கட்சியில் குழப்பம்!? – பொறுப்பாளர்களுக்கு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியில் மன்ற நிர்வாகிகளின் மீதுள்ள புகார்களை கண்காணிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், இப்போதே பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒரே சமயத்தில் ரஜினி கட்சியினர் மேற்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மன்ற நிர்வாகிகள் சிலரே புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ரஜினிகாந்த் தனது புதிய பொறுப்பாளர்களான அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனிடம் நிர்வாகிகள் மீதான புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அறிவுறுத்தியுள்ளாராம். அவர்கள் விசாரித்து நிலவரத்தை சொன்ன பிறகு மேற்கொண்டு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments