Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மீது பற்றுக்கொண்ட பிரதமர் இதை செய்யணும்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:25 IST)
குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் மணிநகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆமதாபாத் தமிழ் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வி நடத்தி வந்த அந்த பள்ளியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “குஜராத் ஆமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவது வேதனையளிக்கிறது. குஜராத் அரசிடம் தமிழக அரசு பேசி பள்ளி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் பள்ளி உள்ள மணிநகர் தொகுதியில்தான் முன்னர் பிரதமர் மோடி குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தமிழ் மீது பற்றுக்கொண்ட பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழ் பள்ளியை திறக்க வழி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் பிடிஆர் என் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments