Publish Date: Sat, 13 Jun 2026 (15:02 IST)
Updated Date: Sat, 13 Jun 2026 (15:06 IST)
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ 25 வருடங்களாக தனது திரைப்படங்களில் அரசியல் வசனங்களை பேசி வந்தார். மறைமுகமாக தான் அரசியலுக்கு வருவேன் எனவும் சொல்லி வந்தார். அது என் கையில் இல்லை ஆண்டவன் கையில் இருக்கிறது என்றெல்லாம் தத்துவம் சொன்னார்.
எப்படியும் அவர் அரசியலுக்கு வந்து விடுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபடியே தன் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஆன்மீக அரசியலை செய்யப் போவதாக கூறினார் ரஜினி. ஆனால், கொரோனா காலத்தில் அவரின் உடலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து பின் வாங்கினார் ரஜினி.
ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு தவெக என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறியிருக்கிறார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா சூப்பர்ஸ்டார்னு ஒரு நல்ல பேர் இருக்கு.. அதை அரசியலுக்கு போய் கெடுத்துக்கணுமான்னு ரஜினி சார் தயங்கினார்.. அதெல்லாம் யோசிக்காம தைரியமா சினிமாவை விட்டுட்டு விஜய் வந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருக்கிறார். இதற்கு முழு காரணம் அவரின் தைரியம்தான் என்று கூறியிருக்கிறார்.